ஊத்தங்கரை அருகே சிறுமி கடத்தல் - வாலிபர் மீது புகார்

ஊத்தங்கரை அருகே சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டுவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இது குறித்து அவருடைய பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தனர். இதில் நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 21) என்பவர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். 

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com