சிறுமி கடத்தல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை கடத்தியதாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருமயம்:

திருமயம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மாயமானார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பனையப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் மகன் அடைக்கலம் (வயது 26) என்பவர் சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று இருவரையும் திருமயம் அழைத்து வந்தனர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மேல் விசாரணை நடத்தினார்.

அப்போது சிறுமியை கடத்திச் செல்ல அடைக்கலத்தின் அண்ணன் லட்சுமணன் (39), தங்கை பழனியாயி (23) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த சிறுமியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், சிறுமியை கடத்தியதாக அடைக்கலம், லட்சுமணன், பழனியாயி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com