கடலூர் சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த போலீஸ்காரர் சஸ்பெண்டு

கடலூர் மத்திய சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்தது தொடர்பாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
சஸ்பெண்டு
சஸ்பெண்டு
Published on

கடலூர்:

கடலூர் மத்திய சிறையில் 2-ம் நிலை காவலர் சுரேஷ் குமார். இவர் பணிமுடிந்து வெளியே வந்தபோது கைதிகள் அறை வளாகத்துக்குள் 5 கிராம் கஞ்சா பொட்டலத்தை வீசியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அவரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் மந்தாரகுப்பத்தை சேர்ந்த கைதி ஒருவருக்கு சுரேஷ்குமார் கஞ்சா சப்ளை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சுரேஷ் குமாரை சிறை கண்காணிப்பாளர் நிகிலாநாகேந்திரன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com