கந்தர்வகோட்டை அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

கந்தர்வகோட்டை அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கடைவீதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற கறம்பக்குடியைச் சேர்ந்த ரவி (வயது 57) என்பவரை கைது செய்தனர். இதேபோல் மிரட்டு நிலை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற மீமிசல் பகுதியை சேர்ந்த சிவா (26) என்பவர் மீது அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com