கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர தீ

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வனப்பகுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடந்தது.
கொடைக்கானல் வனப்பகுதியில் தீ விபத்து
கொடைக்கானல் வனப்பகுதியில் தீ விபத்து
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பகுதியில் தற்போது குளிர் சீசன் நிலவிய போதிலும், பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.

வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வனப்பகுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள அரசுக்கு சொந்தமான தேன் பண்ணை மற்றும் தனியார் தோட்ட பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

புகைமூட்டத்தால் கொடைக்கானல் நகர் பகுதியில் வசிக்கிற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com