பாலாற்றில் 4-வது நாளாக வெள்ளம்- அலைமோதிய மக்கள் கூட்டம்

பாலாற்றில் இன்று 4-வது நாளாக அதிக வெள்ளம் செல்வதால் வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் ஆற்றோரம் திரண்டனர்.
பாலாறு
பாலாறு
Published on

சென்னை:

பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றது. இன்றும் அதே போல தொடர்ந்து தண்ணீர் செல்கிறது. வேலூரில் தொடங்கி கல்பாக்கம் வரை பாலாறு கரைபுரண்டு ஓடுகிறது.

இதன் குறுக்கே உள்ள அனைத்து பாலங்களையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இன்று 4-வது நாளாக அதிக வெள்ளம் செல்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் ஆற்றோரம் திரள்கிறார்கள். பாலங்களின் நடுவில் நின்றும் அதன் அழகை ரசிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com