

புதுச்சேரி:
புதுவை வம்பா கீரப்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி கவுரி. இவர்களது மகன் செல்வம் (வயது 22).
செல்வத்தின் பெற்றோர் இறந்து விட்டதால் அவர் தனது சித்தப்பா கண்ணதாசன் பராமரிப்பில் இருந்து வந்தார். செல்வம் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென செல்வம் வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். உடனே உறவினர்கள் செல்வத்தை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.