மது குடிக்க மனைவி பணம் தராததால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

தவளக்குப்பம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தி அடைந்த மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பாகூர்:

தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு புதுநகரை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 59) மீனவர். மது பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மது குடிக்க மனைவி சரசுவிடம் பணம் கேட்டபோது தர மறுத்ததால் விரக்தி அடைந்த செல்லக்கண்ணு அருகில் உள்ள கொட்டகைக்கு சென்று தூக்குப்போட்டு தொங்கினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து செல்லக்கண்ணுவை அவரது குடும்பத்தினர் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே செல்லக்கண்ணு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com