

போளூர்:
போளூரை அடுத்த கரைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 74), விவசாயி. இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை, ரூ.12 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.