இங்கிலாந்து-நியூசிலாந்து முதல் டெஸ்ட்: 3வது நாள் ஆட்டம் மழையால் ரத்து

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் அறிமுக வீரர் டேவன் கான்வே இரட்டை சதம் விளாச நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்தது.
மழையால் மூடப்பட்ட ஆடுகளம்
மழையால் மூடப்பட்ட ஆடுகளம்
Published on

லண்டன்:

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

அறிமுக வீரர் டிவான் கான்வே அபாரமாக ஆடி (200 ரன்) இரட்டை சதம் விளாசி அவுட்டானார். நிக்கோல்ஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து 18 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும் ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் சரிவை தடுத்து நிறுத்தினர்.

இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 42 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய தினம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com