ஏம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தச்சு தொழிலாளி பலி

ஏம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தச்சு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

புதுச்சேரி:

ஏம்பலம் அருகே கரிக்கலாம்பாக்கம் புது நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 60). தச்சு தொழிலாளி.

இவர் நேற்று மேல்சாத்த மங்கலத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.

ஏம்பலம் மெயின் ரோடு செம்பியம்பாக்கத்தில் உள்ள அரிசி ஆலை அருகே கலியபெருமாள் ரோட்டை கடந்த போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட கலியபெருமாள் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் கலியபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே கலியபெருமாள் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com