உலகளவில் முதன்முறையாக பிட்காயினை அங்கீகரித்துள்ளது இந்த நாடு

பிட்காயினின் நிலையற்றத் தன்மையாலும், பாதுகாப்பற்றத் தன்மையாலும் பல நாடுகளும் அதை பரிமாற்ற நாணயமாக அங்கீகரிக்க சுணக்கம் காட்டி வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

எல் சால்வடோர் என்னும் நாடு பிட்காயினை தங்கள் தேசிய அளவிலான நிதி பரிமாற்றத்துக்கு அங்கீகரித்துள்ளது. அந்த நாட்டில் அமெரிக்க டாலர் பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பிட்காயினும் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தபடும்.

பிட்காயினின் நிலையற்றத் தன்மையாலும், பாதுகாப்பற்றத் தன்மையாலும் பல நாடுகளும் அதை பரிமாற்ற நாணயமாக அங்கீகரிக்க சுணக்கம் காட்டி வருகின்றன.

இப்படியான சூழலில் தான் எல் சால்வடோர் அரசு, பிட்காயினை அங்கீகரித்துள்ளது. எல் சால்வடோரிலும் கூட பிட்காயினை அங்கீகரித்து பணப் பரிமாற்றத்துக்கு ஏற்றபடி நடைமுறைக்கு கொண்டு வருவதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் நிலவி வந்தன. தற்போது அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், அதனாலேயே பிட்காயின் பரிமாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com