தூசி அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த 20 ஆடுகள் திருட்டு

தூசி அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த 20 ஆடுகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

தூசி:

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 20 வெள்ளாடுகளை சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்துவிட்டு தூங்கி விட்டார்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பட்டியில் அடைத்து வைத்திருந்த 20 வெள்ளாடுகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் பாலகிருஷ்ணனின் மகன் தனுஷ்கோடி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com