சீர்காழி அரசு மருத்துவமனையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்- சீரமைக்க கோரிக்கை

சீர்காழி அரசு மருத்துவமனையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகுவதால் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவதை படத்தில் காணலாம்.
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவதை படத்தில் காணலாம்.
Published on

சீர்காழி:

சீர்காழியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு இதன் மூலம் நோயாளிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். இந்த நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com