சீர்காழி அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 3 பேருக்கு வலைவீச்சு

சீர்காழி அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய டீக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
கத்திக்குத்து
கத்திக்குத்து
Published on

சீர்காழி:

சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் திருஞானசம்பந்தம் (வயது 33).

இவருக்கும், டீக்கடை நடத்தி வரும் சீர்காழி ரெயில்வே ரோட்டை சேர்ந்த சாகுல்அமீது (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தென்பாதியில் உள்ள ஒரு டீக்கடையில் திருஞானசம்பந்தம் டீக்குடிக்க வந்தபோது அங்கு வந்த சாகுல் அமீது அவருடைய சகோதரர் மன்சூர்அலி, தந்தை அப்துல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து திருஞானசம்பந்தத்தை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த திருஞானசம்பந்தத்தை அருகில் இருந்தவர்கள் மீ்ட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து திருஞானசம்பந்தம் கொடுத்த புகாரின்பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com