ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு உதவித் தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் அம்மணி அம்மாள், மாவட்ட உதவித் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த ரெயில் கட்டண சலுகைகளை பறிக்க கூடாது. ரெயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. புதுச்சேரி, சண்டிகார் பிரதேசங்களில் பெட்ரோல் மானியம் வழங்குவது போல் தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தாலுகா ஒன்றிய அளவில் முகாம் நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com