திருக்குவளை அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரடி பஸ் போக்குவரத்து தொடக்கம்

திருவாரூர், நாகையில் இருந்து திருக்குவளையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரடி பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது.
அரசு பஸ்சை, கல்லூரி புலமுதல்வர் துரைராசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
அரசு பஸ்சை, கல்லூரி புலமுதல்வர் துரைராசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
Published on

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி அமைந்து உள்ளது. இந்த கல்லூரியில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் வெளியூர்களை சேர்ந்த ஆசிரியர்களும் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

இந்த கல்லூரி திருக்குவளை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. அங்கிருந்து கல்லூரி வளாகத்துக்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செல்ல வேண்டும் என்றால் நடந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

கல்லூரிக்கு நேரடியாக அரசு பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு இருந்தது. அதன்பேரில் திருவாரூர், நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருக்குவளைக்கு இயக்கப்படும் பஸ்கள் பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு வந்து செல்லும் வகையில் நேரடி பஸ் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று கல்லூரி வளாகத்துக்கு நேரடி பஸ் போக்குவரத்து தொடங்கியது. அதன்படி கல்லூரியில் இருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை, கல்லூரி புலமுதல்வர் துரைராசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com