மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை

மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில் மது குடிப்பதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். பணம் கொடுக்க அவரின் மற்றும் குடும்பத்தினர் மறுத்ததால் மனம் உடைந்த குமார் பூச்சிமருந்தை குடித்து விட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்,மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு  செல்லப்பட்டார். அங்குஅவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com