

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை ரயிலடி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 34). சமையல் தொழிலாளி இவர், தனது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்து, நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் மாவட்ட கலெக்டர் லலிதா, சிறையில் இருந்த ஈஸ்வரனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை பெற்ற மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈஸ்வரனை திருச்சி கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.