காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனை பெற கட்டுப்பாட்டு அறை எண்கள் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனை பெற கட்டுப்பாட்டு அறை எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் மருத்துவர் சுகாதார ஆய்வாளர்கள், வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி துறை, பேரூராட்சிகள் மற்றும் போலீஸ் துறை சார்ந்த அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும்வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கொரோனா தொற்று தொடர்பான தங்களது சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகளை பெற

044-27237107, 044-27237207, 044-27237784, 044-27237785

இலவச தொலைபேசி எண்: 1800-425-8978 போன்றவற்றை தொடர்பு கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு அனைத்து பொதுமக்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com