தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் மூச்சு திணறி பலி

கிருஷ்ணகிரி அருகே தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் மூச்சு திணறி பலியாகினர்.
பெரியசாமி- முருகன்
பெரியசாமி- முருகன்
Published on

கிருஷ்ணகிரி:

தர்மபுரியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கிருஷ்ணகிரி ஆனந்த் நகர் பகுதியில் பழைய வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த வீட்டில் உள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணி நேற்று நடந்தது.

இந்த பணியில் கட்டிகானப்பள்ளி கீழ்புதூரை சேர்ந்த வெங்கடாசலபதி (வயது 40), முருகன் (55), சத்யசாய் நகரை சேர்ந்த பெரியசாமி (52) ஆகிய 3 கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தண்ணீர் தொட்டிக்குள் 3 தொழிலாளர்கள் இறங்கிய உடன் ஒருவர் பின் ஒருவராக மூச்சு திணறி உள்ளே மயங்கி விழுந்தார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்ததில் பெரியசாமி மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் பலியானது தெரியவந்தது. வெங்கடாசலபதி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com