சீர்காழி நகர் பகுதியில் ரூ.8 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி

சீர்காழி நகர் பகுதியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
திருவேங்கடம் பிள்ளை பூங்கா சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.
திருவேங்கடம் பிள்ளை பூங்கா சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.
Published on

சீர்காழி:

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் பல்வேறு சாலைகள் நீண்ட காலமாக சேதமடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து சீர்காழி பாரதி எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, சீர்காழி நகர் பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர், கோரிக்கை ஏற்று தமிழ்நாடு உட்கட்டமைப்பு சாலைகள் திட்டம், சிறப்பு சாலைகள் திட்டம் ஆகிய திட்டங்கள் சார்பில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு சாலைகள் திட்டம், தமிழ்நாடு உட்கட்டமைப்பு சாலைகள் திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புளிச்சக்காடு சாலை 3 கிலோ மீட்டர் 95 லட்சம் மதிப்பீட்டிலும், எம்.எஸ்.கே.நகர் 225 மீட்டர் ரூ.18 லட்சம் மதிப்பீட்டிலும், இனம் குணதலபாடி சாலை 575 மீட்டர் ரூ.28 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் தவசி நகர், வீரம்மாள் நகர், சுந்தராம்பாள் நகர், பெரிய வகுப்பு கட்டளை தெரு, புழுகாபேட்டை, திருத்தாளமுடையார் கோவில் முதல் அகர திருக்கோலக்கா வரை உள்ள சாலை, நங்கநல்ல தெரு, தேசாய் கதிர்வேல் தெரு, தென்பாதி திருவேங்கடம்பி்ள்ளை பூங்கா சாலை, மாரிமுத்து நகர், கணபதி நகர், வ.உ.சி. கிழக்குதெரு உள்ளிட்ட சாலைகள் தார் சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com