காரியாபட்டி அருகே கல்லூரி மாணவி கடத்தல்- போலீசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் காயத்ரி அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக காயத்ரி வீட்டில் கூறிச் சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் குடும்பத்தினர் தேடியும் காயத்ரி பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை கருப்பசாமி மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார்.

அதில் காயத்ரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகவும், அவர் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காயத்ரியை தேடி வருகின்றனர்.

சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் கல்பனாதேவி (19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், வழக்கம் போல் காலை கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com