தந்தை இறந்த துக்கம் தாங்காமல் சாப்பிடாமல் இருந்த கல்லூரி மாணவி மரணம்

பெருந்துறையில் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் சாப்பிடாமல் இருந்த கல்லூரி மாணவி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

பெருந்துறை:

பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு மதுமிதா (வயது 20) என்ற மகளும் மலைராஜா என்ற மகனும் உள்ளனர். மதுமிதா தற்போது பி.ஏ. படித்து வருகிறார்.

இந்நிலையில் ஆறுமுகம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் பாக்கியலட்சுமி தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு பெருந்துறை மேக்கூர் பகுதியில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று மதுமிதா காலை மற்றும் மதிய உணவு சாப்பிடாத நிலையில் வீட்டு வேலை செய்துவிட்டு மதியம் தூங்க சென்றுள்ளார். மாலை அவரது தம்பி எழுப்பிய போது மதுமிதா எழுந்திருக்கவில்லை.

உடனடியாக தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பாக்கியலட்சுமி மதுமிதாவை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மதுமிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com