மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவர் கைது

தாம்பரம் அருகே 18 வயதுடைய கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

தாம்பரம்:

சென்னை தாம்பரம் அடுத்த மகாலட்சுமி நகர் மசூதி காலனியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 20). இவர், மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு பட்டபடிப்பு படித்து வருகிறார்.

இவர், 18 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமானார். அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி வற்புறுத்தினார்.

ஆனால் ஷேக் முகமது, மாணவியை திருமணம் செய்ய மறுத்தார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக் முகமதுவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com