ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இல்லை- கலெக்டர் சி.கதிரவன் பேட்டி

பறவை காய்ச்சல் தொடர்பான எந்த ஒரு அறிகுறியும் ஈரோடு மாவட்டத்தில் இல்லை என்று கலெக்டர் சி.கதிரவன் கூறியுள்ளார்.
கலெக்டர் சி.கதிரவன்
கலெக்டர் சி.கதிரவன்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பறவை காய்ச்சல் தொடர்பான எந்த ஒரு அறிகுறியும் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இல்லை. அதே நேரம் ஈரோடு மாவட்ட எல்லைகளான தாளவாடி, பர்கூர், கடம்பூர், பவானி, கொடுமுடி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கேரளாவில் இருந்து வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை மற்றும் முட்டை பண்ணை உரிமையாளர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டு பண்ணைகளை முழுமையாக சுகாதாரமாக பேணவும், தடுப்பூசிகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. 

இதுபோல் மாவட்ட நிர்வாகத்துடன், சுகாதார பணிகள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையினரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com