ஊட்டியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ரேஷன் அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்ததை காணலாம்.
ஊட்டியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்ததை காணலாம்.
Published on

ஊட்டி:

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். அவர்களை பள்ளிக்கு அனுப்புவது போன்ற கடமையை செய்வேன் என்று அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ரேஷன் அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா 5 பேருக்கு தலா ரூ.2,000 நிவாரண நிதி உதவி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, சமூக நல அலுவலர் தேவகுமாரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com