திருவண்ணாமலையில் நீர்மட்டம் உயர்வுக்கு கலெக்டரின் அதிரடி நடவடிக்கை- அரசு பாராட்டி ஊக்குவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மட்டம் உயர நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநருக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு தெரிவித்தார்.
கலெக்டர் முருகேஷ்
கலெக்டர் முருகேஷ்
Published on

தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் திருவண்ணாமலை மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது தெரியவந்தது.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மட்டம் உயர நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதன் பின்னர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் பெரும்பாலான பண்ணைக்குட்டைகள் நிரம்பி உள்ளன. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது பற்றிய தகவலும் சமீபத்தில் வெளியானது.

இதனை அறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷுக்கு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 1,121 பண்ணை குட்டைகள் அமைத்து நீர்மட்டம் உயர செய்ததுடன், உலக சாதனை நிகழ்த்தியதற்காகவும் கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com