சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு அருகே கங்கைசூடாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (வது 27). இவர் நேற்றுமுன்தினம் இரவு சேத்துப்பட்டு நோக்கி மோட்டாசைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அண்ணாநகர் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம்தெரியாத ஒரு வாகனம் அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com