வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறிப்பு- 2 வாலிபர்கள் கைது

தஞ்சையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கீழ சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 39). சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் மாரியம்மன் கோவில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது செல்போன் மற்றும் ரூ.300 பணத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து பிரபு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாரியம்மன்கோவிலை சேர்ந்த நாகராஜ்(22), நாடியாப்பிள்ளை தெருவை சேர்ந்த குருமூர்த்தி(24) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.300 பணமும் மீட்கப்பட்டது. மேலும் வழிப்பறிக்கு உபயோகப்படுத்திய மோட்டார் சைக்கிளிலும் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com