சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - 3 பேர் மீது வழக்கு

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இது தொடர்பாக தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒரு கிராமத்தில் சம்பவத்தன்று 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் அரவிந்த்(22) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து உள்ளார். பின்னர் அந்த வாலிபர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது வெளியே சென்றிருந்த சிறுமியின் தாயார், அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து சிறுமியை மீட்டு உள்ளார். அங்கிருந்து அரவிந்த் தப்பி ஓடி விட்டார்.

பின்னர் அரவிந்த், அவருடைய தந்தை ராஜேந்திரன், தம்பி அஜீத் ஆகியோர் சிறுமியிடம் இது குறித்து போலீசுக்கு புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து அந்த சிறுமி சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனுப்பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக அரவிந்த் அவரது தந்தை ராஜேந்திரன், தம்பி அஜீத் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவர்கள் 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com