ஒட்டன்சத்திரம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: விவசாயி பலி

ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் குளத்து புதூரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 60) விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாராபுரம்- கள்ளிமந்தயம் பைபாஸ் ரோட்டில் திருமலை கவுண்டன் வலசு அம்மன் கோவில் வளைவு அருகே சென்ற போது தண்டபாணி மீது பின்னால் வந்த கார் மோதியது. 

இதில் சம்பவ இடத்திலேயே தண்டபாணி பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் கள்ளிமந்தையம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூரைச் சேர்ந்த கார் டிரைவர் செந்தில் குமார் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். 

தாராபுரம்- ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அதிவேகமாக செல்லும் வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com