குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்வி சென்ற கருஞ்சிறுத்தை- பொதுமக்கள் பீதி

குன்னூர் அருகே கருஞ்சிறுத்தை குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்வி சென்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கருஞ்சிறுத்தை
கருஞ்சிறுத்தை
Published on

குன்னூர்:

குன்னூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் வண்டிசோலை மற்றும் அளக்கரை சாலையில் எம்குண்டு குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுமார் 150 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பை சுற்றி தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு எமகுண்டு குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம் இருந்தது. இதுகுறித்து கட்டபெட்டு வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு கட்டிருந்த நாய் திடீரென மாயமானது. அதனை எங்கும் தேடியும் காணவில்லை.

இதனால் சந்தேகமடைந்த நாயின் உரிமையாளர் அந்த பகுதியில் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது கருஞ்சிறுத்தை குடியிருப்புக்குள் உலா வந்ததும், பின்னர் அந்த கருஞ்சிறுத்தை நாயை கவ்வி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிக்குள் கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனித-வனவிலங்குள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைவாக வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு, கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com