

புதுடெல்லி:
இன்று முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரையிலான 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். மற்ற 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
இன்று மாதத்தின் கடைசி சனிக்கிழமையாகும். ஞாயிற்றுகிழமையாகும். 29-ந் தேதி ஹோலி பண்டிகை. 31-ந் தேதி நிதியாண்டின் இறுதி நாளாகும்.
ஏப்ரல் 1-ந் தேதி வங்கி கணக்கு முடிக்கும் தினமாகும். 2-ந் தேதி புனித வெள்ளி. 4-ந் தேதி ஞயிற்றுக்கிழமை. இந்த 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
இடையில் உள்ள மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 (சனிக்கிழமை) ஆகிய 2 தினங்களில் வங்கிகள் செயல்படும். 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கி பணி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, ஹோலி பண்டிகைக்கு விடுமுறை கிடையாது. வட மாநிலங்களில்தான் விடுமுறை. இதேபோல 31-ந் தேதியும் நிதியாண்டின் இறுதி நாளன்று விடுமுறை கிடையாது என்றார்.