தூத்துக்குடியில் வாழை இலை விலை இரு மடங்கு உயர்வு

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் மழைநீரில் மூழ்கின.
வாழை இலை
வாழை இலை
Published on

தூத்துக்குடி:

குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வாழை இலைகள் அதிக அளவில் வரும். 2 மாவட்டங்களிலும் உள்ள மார்க்கெட்டுகளுக்கு வந்து சேரும் இந்த வாழை இலை கட்டுகளை வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் மழைநீரில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்தன.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து சேரும் வாழைகட்டுகள் வரவில்லை. வழக்கமாக 500 கட்டுகள் வரை வாழைகள் குமரி மாவட்டத்தில் இருந்து வரும். ஆனால் மழையால் கடந்த 3 நாட்களாக 150 முதல் 200 கட்டுகளே வருகின்றன. வரத்து பாதியாக குறைந்ததால் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக்கள், பூஜைகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் வாழை இலை முக்கிய இடம் பிடிப்பதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மார்க்கெட்டில் இன்று காலை 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com