

வேதாரண்யம்:
வேதாரண்யம் நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 40). இவருக்கு திருமணமாகி விட்டது. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
சம்பவத்தன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அய்யாதுரையை உறவினர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்பு தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாதுரை இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.