விம்பிள்டன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி

நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி கடந்த 2019-ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்பையுடன் ஆஷ்லி பார்ட்டி
கோப்பையுடன் ஆஷ்லி பார்ட்டி
Published on

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடந்தது. நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.

ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள்  நீடித்த இந்தப்  போட்டியில் ஆஷ்லி பார்ட்டி 6-3, 6-7, 6-3 என்ற செட்கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். ஆஷ்லி பார்ட்டி வெல்லும் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com