அரியாங்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

அரியாங்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பாகூர்:

அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 62), தனியார் நிறுவன ஊழியர். கடலூர் - புதுச்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் அரியாங்குப்பம் நான்குமுனை சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குபின்னால் வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், தேவராஜன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவராஜன் பரிதாபமாக இறந்துபோனார்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com