

அரிமளம்:
அரிமளம் ஒன்றியம் புதுநிலைப்பட்டியில் கே.புதுப்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரை கண்டதும் ஒருவர் லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். போலீசார் லாரியை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவர் கே.ராயவரத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் மீது கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.