

அரிமளம்:
அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் கண்மாய் கரையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அரிமளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 10 பேரை பிடித்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.