அன்னவாசல் அருகே மயங்கி விழுந்த முதியவர் பலி

அன்னவாசல் அருகே மயங்கி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). சலவை தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், நேற்று முன்தினம் இரவு காட்டுப்பட்டியில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக முக்கண்ணாமலைப்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com