ஆதம்பாக்கம் அருகே வாலிபர் தற்கொலை

ஆதம்பாக்கம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆலந்தூர்:

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மதன்குமார் (வயது 23). கடந்த சில தினங்களுக்கு முன்பு மதன்குமாரிடம் ரூ.48 ஆயிரம் பணத்தை அவரது பெற்றோர் கொடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பணத்துடன் என்.ஜி.ஓ காலனி பகுதியில் சென்ற போது, சிலர் வழிமறித்து பறித்து சென்றதாக மதன்குமார் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடமாக கூறப்படும் இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என தெரியவந்தது. பணத்தை தவறவிட்டதால் மதன்குமாரை பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் மது அருந்திய நிலையில், வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com