வெள்ளாற்றில் மணல் அள்ளிய 6 பேர் கைது

செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் பகுதி வெள்ளாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் பகுதி வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தளவாய் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது அனுமதியின்றி டயர் மாட்டு வண்டியில் மணல் அள்ளிய சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், பாக்கியராஜ், வைரவன், பூவரசன், விக்னேஷ், தமிழ்ச்செல்வன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். டயர் மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com