உ.பி.யில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு

கள்ளச்சாராயம் குடித்த பின்னர் இறந்தவர்களில் ஒருவரது உடலை அவர்களின் உறவினர்கள் தகனம் செய்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

ஹத்ராஸ்:

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம், நக்லா சிங்கி கிராமத்தில் உள்ள சிலர் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். அதன்பின்னர் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘ஒருவர் மருத்துவமனையில் இன்று இறந்துள்ளார். ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் நேற்று இரவே தகனம் செய்துவிட்டனர். 3 உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். 

அவர்களின் இறப்புக்கான காரணம் குறித்து உறுதியாக தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே தெரியவரும். அவர்களின் உள்ளுறுப்பு பாதுகாக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என கூறினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com