

செங்கல்பட்டு:
சென்னை அடுத்த கல்பாக்கம் அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.