தேர்தல் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு- கலெக்டர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்ட  கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.20 லட்சத்தை 73 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும் சி விஜில் என்ற செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம். மாவட்டத்தில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 112 வாக்குசாவடிகள் பதற்றமானவை ஆகும்.

மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுடன் இணைந்து பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com