வேலூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது

வேலூர் அருகே சாரயம் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வேலூர்:

வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வேலூரை அடுத்த மேல்பள்ளிப்பட்டு, வெட்டுவாணம் பகுதியில் சாராய விற்பனையை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை செய்த ஆறுமுகம் மனைவி பவானி (வயது 40) மற்றும் வெட்டுவாணம் அருகே உள்ள கோவில் பின்புறம் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மனைவி கிருஷ்ணவேணி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 209 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com