பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் தேவை- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத் தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பது தான், நான் கண்ட உண்மை.  பணப்பட்டுவாடாவை தடுப்பது ஒரு சவால் தான். சமுதாயத்தை ஒருவர் மட்டுமே திருத்தி விட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சனைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வுகாண வேண்டும்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com