வந்தவாசி அருகே ஜெயின் கோவிலில் 2 சாமி சிலைகள் திருட்டு

வந்தவாசி அருகே ஜெயின் கோவிலில் 2 சாமி சிலைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சிலைகள் திருட்டு
சிலைகள் திருட்டு
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பொன்னூர் மலை அடிவாரத்தில் முனி சுக்கிர பகவான் ஜெயின் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் பிரதான கேட் உள்பட 3 கிரில் கதவுகள் உடைக்கப்பட்டு கோவில் உள்ளே இருந்த பித்தளை சிலைகள் 6 அங்குலம் உயரம் மற்றும் 7 அங்குலம் உயரம் கொண்ட 2 ஜெயின் சாமி சிலைகளும், 2 பீடம், 2 எந்திர உலோக பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருடுபோன 2 சிலைகளின் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com