மத்திய ஆசிய நாடுகள் பேச்சுவார்த்தை - உஸ்பெகிஸ்தான் வந்தார் சுஷ்மா சுவராஜ்

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சமர்கன்ட் நகரை வந்தடைந்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
மத்திய ஆசிய நாடுகள் பேச்சுவார்த்தை - உஸ்பெகிஸ்தான் வந்தார் சுஷ்மா சுவராஜ்
Published on

சமர்கன்ட்:

மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 நாள் பயணமாக இந்நாடுகளுக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்து நாடுகளின் தலைவர்களும் நாளை முதன்முறையாக ஒன்றுகூடி உஸ்பெகிஸ்தான் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்  இருநாள் பயணமாக இன்றிரவு அந்நாட்டின் தலைநகரான சமர்கன்ட் நகரை வந்தடைந்தார்.

சமர்கன்ட் விமான நிலையத்தில் அவருக்கு உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்அஜிஸ் கமிலோவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #SushmaSwaraj  #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue

X

Maalai Malar
www.maalaimalar.com